முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா #8 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்:

ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6 | 7

நாள் ஓடிக்கிட்டே இருந்தது. அடுத்து ரெண்டு மாசத்துல எனக்கும் கடிநாயிக்கும் கல்யாணம். எனக்கு அவன் எம்மேல எம்புட்டு உசுரா இருக்கான்னு தெரியும், ஆனாலும், ஆச வரல எனக்கு அவன் மேல.

என்கிட்டே வந்து அவன் சிரிக்கிறதும், கொஞ்சலாப் பேசுரதுமா இருந்தான். பழையபடி இல்லாம, சண்டை போடாம, ஏன் இவன் இப்புடி மாறுனான்? எனக்கு நெனைக்க நெனைக்க ஆச்சர்யம்!

இப்பிடியே போயிட்டு இருந்தது. தெனமும் நான் வேலைக்குப் போயிட்டு வர்றப்போ, எங்கூடவே வருவான். எனக்கு எரிச்சலா இருக்கும். அய்யோ.. இவனப் போய் கட்டிக்க வேண்டியதாப் போச்சேன்னு நெனப்பேன்.

ஒரு நாள் இதே மாதிரி, வேல முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வீட்டுக்குள்ள நொழஞ்சேன், யாரோ வந்திருந்தாங்க, அவுங்க யாருன்னு தெரியாம, முழிச்சிக்கிட்டே உள்ள போயிட்டேன்.

அவங்க பேசுரதக் கேட்டதுக்கு அப்பறமா தான் புரிஞ்சது எனக்கு, அவங்க என்ன பொண்ணு கேட்டு வந்திருக்காங்கன்னு.

அங்க என் கூட வந்த கடிநாய், உண்மையாவே கடிநாயா மாறி, வந்த அந்த ஆளுங்க கூட சண்டை போடா ஆரம்பிச்சி இருந்தான்.

வந்த ரெண்டு பேருமே, கொஞ்ச வயசுக்காரங்களா இருந்தாங்க. அதுல கொஞ்சம் செவப்பா முழுக்கால் சட்ட போட்டு, முழுக்கைச் சட்ட போட்ருந்தவர்  தான் என்னப் பாத்துப் புடிச்சுப் போய், பொண்ணு கேக்க வந்திருக்றதா சொன்னாரு.

கடிநாய்க்கு வந்த கோவத்துல, ஊரையே கூட்டிடான். "இவ எனக்கு பேசி முடிச்சவ, என்ன தைரியத்துலடா வந்தீங்க...", இப்படி ஆரம்பிச்சு, கேட்ட வார்த்தை சரளமா வந்துச்சு அவன் வாய்ல.

எனக்கு கேக்கவே முடியல. ஊரே கூடிருச்சு. என்னக் கேட்டு வந்த அந்தச் செவத்த ஆழு பெரிய கட வச்சிருக்காராம். நான் துணி தொவைக்கப் போனப்போ, என்ன வழில எங்கயோ பாத்ருக்காரு, புடிச்சுப் போச்சுன்னு வந்திருக்காரு. பணக்காரர். படிச்சவர்.

எங்க அத்தைக்கு என்ன சொல்லனு தெரியல, படிச்ச, பணக்கார மாப்பிள்ளை, குடுக்கலாமானு ஒரு யோசனை, மறுபக்கம், கடிநாய்க்கும் எனக்கும் பேசி முடிச்சாக்கேனு தயக்கம்.

கடி நாய் மட்டும், சும்மாவே இருக்கல, சண்ட, கேட்ட வார்த்த, இதெல்லாம் அவனுக்கு உள்ளயே ஊருனது. சட்டையைப் புடிச்சு, அந்த பணக்கார மாப்பிள்ளைய, அடிச்சான்.

ஊர் காரங்க வெலக்கி விட்டாங்க இவங்க சண்டைய.

"என்னய்யா, இவங்க ரெண்டு பேருக்கும் புடிக்குது சரி, ஆனா அந்தப் புள்ளைக்கு யாரப் புடிக்குதோ, அவங்களுக்குத்தானையா கட்டி வைக்க முடியும், அதக் கூப்புடுங்க.", கூட்டத்துல பெரியாலு ஒருத்தர் இப்படிக் கொளுத்திப் போட, என்னக் கூப்டாங்க.

என்ன செய்றதுன்னு தெரியாமத் தயங்கி நின்னேன். கடி நாய்க்கு எம்மேல அம்புட்டு ஆச, ஆனாலும், மொரடன், ஊர் சுத்தி, நிலையான வேல கெடையாது.

நான் கனவு கனவு கண்டது மாதிரி ராச குமாரன் இவரு.

ரெண்டு பேருல யாரக் கை நீட்டனு தெரியாம திகைச்சு நின்னேன்.

"சொல்லுமா... ரெண்டு பேருல யாரப் பிடிச்சிருக்கு..? சொல்லு.." எல்லாரும் கட்டாயப் படுத்த, யோசிச்சு நின்னேன்..

--------------------------------
யாரை ஓவம்மா திருமணம் செய்தால்? வாசிக்கலாம், அடுத்த பகுதியில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்