நமது தமிழ் சூரியன் போல. புயல் அடிப்பதால் சூரியன் அணைவதில்லை பாருங்கள்.
"உணவுப் பழக்கம், உடை உடுத்துவது, விருந்தோம்பல், தமிழ் பெண்களுக்கே உரிய நாணம்?" இப்படி ஒவ்வொன்றிலும் தனித்துவம் வாய்ந்தவர்கள் நாம்!
ஆனால் இன்று? நமது தனித்துவம் மறைந்து வருவது கண்கூடாகத் தெரியுதே? எல்லாவற்றிலும் கலப்பு! உடுப்பு, படிப்பு, இப்படி எல்லாவற்றிலும் ஆங்கில வாசனை நுகர்ந்தே சுகம் கண்டு பழகிவிட்டோம்!
கூட்டுக் குடும்பங்கள் கரைந்து போய் விட்டன;
பாட்டிக் கதைகள் முதியோர் இல்லம் அடைந்தன!
விருந்தோம்பல் பசியால் மெலிந்து போயிற்று!
பெண்மையின் நாணம் கூட நாணி நாணி மறைந்து போய்விடும் போல!
எறும்புகள் பசியாற முற்றத்தில் கோலமிட்ட நம் ஈகை உள்ளம் இன்று சுருங்கிப் போனதேனோ? அர்த்தம் நிறைந்தவை நமது முன்னோர்களின் பழக்கங்கள் எல்லாம். அர்த்தமற்றவையாய் மாற்றிவிட்டோமே?
எழுதும் எழுத்தில், கவிதையோ கதையோ, ஆங்கிலம் கலந்தால் தான் இணையத்தில் விருப்பங்கள் அதிகம் கிடைக்கிறது!
ஆங்கிலமும் ஆங்கிலேயரும் நமக்கு எதிரிகள் அல்ல! ஆனால், நம் மொழியையும், கலாச்சாரத்தையும் நமக்கு எதிரி போல எண்ணுவது, தவறல்லவோ?
"காலத்திற்கேற்ப மாற்றம் தேவை தான். ஆயினும் இப்படிப்பட்ட மாற்றங்கள் நமது தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அவசியமானதா?"
இதை உங்களிடம் நீங்களே இருமுறை கேட்டுப்பாருங்கள். மாற்றம் என்னிடமும், உங்களிடமும் இருந்து பிறக்கட்டுமே?
SUjatha oru katturai gyabagathukku varuthu...
பதிலளிநீக்குTamil kalachaaram ah ? mudhalla tamilar gal irukangala nu paarunga...
Online la tamil iruppathe intha maaro blogs la than theriyuthu..
Aporam, neenga solra maari kalacharam kai vitttu poitu than irukku, 1st century la vaztha maari ippo namma vazhrathu illa..
munnetram ngra name la namma romba fast ah alinjitu varom ngrathu oru kasappana unmai...
உண்மை தான். மாற்றம் உயர்வுப் பாதையை நோக்கி இல்லை, மாறாக அழிவை நோக்கிச் செல்கிறது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்களை சகோ சீனு வலைச் சரத்தில் அறீமுகம் செய்துள்ளார் , பார்க்க :
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2013/02/tamil-bloggers-3.html
ஆங்கிலமும் ஆங்கிலேயரும் நமக்கு எதிரிகள் அல்ல! ஆனால் அவை இரண்டும் நம் தமிழை நமக்கு எதிரியாக மாற்றி விட கூடாது.. நல்ல கருத்து.. (எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்....)
பதிலளிநீக்குநன்றி... :)
நீக்கு